ஆஸி., பாலைவனத்தில் தவித்த பாட்டியைக் காப்பாற்றிய நாய்

40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொளுத்தும் வெயிலில் தனது நாயுடன் 12 நாட்கள் தாக்குப்பிடித்துள்ளார் அந்த மூதாட்டி.


ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று ஆலிஸ் ஸ்பிரிங்ஸ். இந்நகரின் தென்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பாலைவனப்பகுதி உள்ளது.

டம்ரா மெக்பீத் ரிலே என்ற 52 வயது மூதாட்டி கடந்த நவம்பர் 19ஆம் தேதி பிற்பகல் இப்பகுதிக்கு காரில் சென்றுள்ளார். இவருடன் கிளேர் ஹாக்ரிட்ஜ் மற்றும் பூ ட்ரான் ஆகிய இரு நண்பர்களும் சென்றுள்ளனர். மூதாட்டியின் வளர்ப்பு நாய் ரயாவும் உடன் சென்றுள்ளது.

இவர்களுடைய கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஒரு இடத்தில் நின்றிருக்கிறது. காரை சரிசெய்ய இயலாத நிலையில் மூன்று பேரும் ஆளில்லா காட்டில் மாட்டிக்கொண்டிருக்கின்றனர்.

ஹ்யூக் ஆற்றிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறோம் என நினைத்து, இரு நண்பர்களும் மூதாட்டியையும் நாயையும் தனியே விட்டுவிட்டு உதவி தேடிச் சென்றுள்ளனர். போனவர்கள் திரும்பி வராத நிலையில், 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொளுத்தும் வெயிலில் 12 நாட்கள் தாக்குப்பிடித்துள்ளார் அந்த மூதாட்டி.